ஒரு கப் பால் தேநீர் 100 ரூபாவாக உயர்வு உணவக உரிமையாளர் தீர்மானம் 21.03.2022
ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.